பொழுதுபோக்கு

மணிமேகலைக்கு பதிலாக புதிய தொகுப்பாளர்?? விஜய் டிவியின் ஆட்டம் ஆரம்பம்

தமிழ் ரசிகர்கள் மத்தியில், அதிக ஆதரவை பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று, குக் வித் கோமாளி சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த சண்டையால் மணிமேகலை இதிலிருந்து விளகினார்.

இவருக்கு பதிலாக புதிய தொகுப்பாளர் ஒருவரை களமிறக்க இருக்கிறது, அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி.

யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எதை திறந்தாலும், சமீப சில நாட்களாக தொடர்ந்து காட்டப்படும் முகங்களாக இருக்கின்றனர் மணிமேகலையும் பிரியங்காவும்.

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர்களான இவர்கள், ஒன்றாக குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதுவரை கோமாளியாக வந்த மணிமேகலை இந்த முறை தொகுப்பாளராக வந்தார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஸ்டார் ஹோஸ்ட் ஆக இருக்கும் பிரியங்கா, இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக் ஆக களமிறங்கினார்.

இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் சில வாரங்களுக்கு முன்பு நடைப்பெற்ற ஷூட்டில் வாக்குவாதம் எழுந்ததாகவும், இதனால் கோபம் முற்றிப்போய் மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளியானது.

அதை உறுதிப்படுத்தும் வகையில், மணிமேகலையும் ஒரு வீடியோவை வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.

இதையடுத்து, பிரியங்கா மீது பலரும் வெறுப்பு மழையை பொழிய ஆரம்பித்தனர். இது குறித்து மணிமேகலை தரப்பில் இருந்து தொடர்ந்து வீடியோக்கள் வெளியானது. பிரியங்காவிற்கு ஆதரவாக சில பிரபலங்கள் குரல் கொடுத்தாலும், மக்களுக்கு அவர் மீது இருந்த நல்ல அபிப்ராயம் கெட்டு விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் சேனல் புதிய ப்ரமோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், புதிதாக ஒரு ஆங்கரை களமிறக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

புதிய தொகுப்பாளர் குறித்து வெளியிடப்பட்டுள்ள ப்ரமோவில், யார் அந்த தொகுப்பாளர் என்ற விவரம் வெளியாகவில்லை. ஆனால், அதில் வரும் வாய்ஸ் ஓவரில், அவர் நமக்கு தெரிந்தவராகவும் இருக்கலாம், தெரியாதவராகவும் இருக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த தொலைக்காட்சியில் ஏற்கனவே இருக்கும் ஒரு ஆங்கராக இவர் இருக்கலாம் என கூறப்படுகிறது.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content