இலங்கை

பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சென்றவருக்கு நேர்ந்த கதி!

திருகோணமலை- நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறந்தநாள் கொண்டாடுவதற்குச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று (22) பதிவாகியுள்ளது.

திருகோணமலை- திருஞானசம்பந்தர் வீதியில் வசித்து வந்த கனகரத்னம் சிவக்குமார் (53வயது) என்பவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சாம்பல்தீவு கடற்கரைக்கு ஆறு பேர் கொண்ட குழு சென்றதாகவும் அதில் மூவர் குளித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் இதனையடுத்து பொலிஸார் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், மரணம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content