இலங்கை

இலங்கையில் பல்கலைக்கழக மாணவன் மரணம் – பொலிஸார் சந்தேகம்

தியகம தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தவறி விழுந்தமையால் படுகாயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரிகில்லகஸ்கட ரன் கெட்டிய வீதியில் வசித்து வந்த விக்கும் சுபஸ்வர விதான ஆராச்சி என்ற 25 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர் என தெரியவந்துள்ளது.

குறித்த மாணவனை நேற்று முன்தினம் காலை 10.20 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதித்த மாணவர்கள் மூன்றாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்ததாக தெரிவித்தனர்.

எனினும் வைத்தியர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்த போதும் அவர் மதியம் 12.15 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர் விடுதி அறையில் வெளிநபர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் மத்தியில் கருத்துக்கள் பரவி வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கஹதுடுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எச்.கே.பிரியங்கரவின் பணிப்புரைக்கமைய, விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content