Site icon Tamil News

இலங்கையில் பல்கலைக்கழக மாணவன் மரணம் – பொலிஸார் சந்தேகம்

தியகம தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தவறி விழுந்தமையால் படுகாயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரிகில்லகஸ்கட ரன் கெட்டிய வீதியில் வசித்து வந்த விக்கும் சுபஸ்வர விதான ஆராச்சி என்ற 25 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர் என தெரியவந்துள்ளது.

குறித்த மாணவனை நேற்று முன்தினம் காலை 10.20 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதித்த மாணவர்கள் மூன்றாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்ததாக தெரிவித்தனர்.

எனினும் வைத்தியர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்த போதும் அவர் மதியம் 12.15 மணியளவில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர் விடுதி அறையில் வெளிநபர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் மத்தியில் கருத்துக்கள் பரவி வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கஹதுடுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எச்.கே.பிரியங்கரவின் பணிப்புரைக்கமைய, விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

Exit mobile version