இலங்கை

திருகோணமலை:கிராமத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் – அச்சத்தில் அப்பகுதி மக்கள்

திருகோணமலை-நாமல்வத்தை கிராமத்துக்குள் புகுந்து யானை அட்டகாசம் செய்ததால் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.

மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாமல்வத்தை கிராம மக்கள் வீட்டுத் தோட்டம், விவசாயம் போன்றவற்றை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.குறித்த கிராமத்தை சுற்றி யானை மின் வேலிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் யானைகள் மாலை 6.00 மணிக்கே கிராமத்துக்குள் உட்புகுந்து வீட்டுத் தோட்டங்கள்,தென்னை மரங்கள்,வாழை மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருவதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதேவேளை யானையை விரட்டுவதற்காக முற்படுகின்ற போது வெளிச்சத்தை நோக்கி யானை துரத்தி வந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.குறித்த கிராமத்துக்குள் புகுந்த யானை இரண்டு நாட்களில் எட்டு வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும்,நெல் தானியங்களை உட்கொண்டு சென்றுள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிராமத்தை சுற்றி போடப்பட்டிருக்கின்ற யானை மின் வேலிகள் சீரான முறையில் கவனிக்கப்படாமல் ,மின் இணைப்பு இன்றி இருப்பதனாலயே யானைகள் கிராமத்துக்குள் உட்புகுந்து அட்டகாசம் செய்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு யானை அட்டகாசம் செய்யும் போது தொலைபேசி அழைப்பு விடுத்தாலும் கூட உரிய நேரத்தில் வருகை தருவதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தனர்.ஆகவே யானையின் அட்டகாசத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாமல்வத்தை கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(Visited 11 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content