Site icon Tamil News

ஆஸ்திரியாவில் திடீரென தீப்பற்றிய ரயில் – 200 பயணிகள் வெளியேற்றம்

ஆஸ்திரியாவில் ரயில் தீப்பற்றியதால் அதிலிருந்து சுமார் 200 பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுரங்கத்தில் சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 45 பயணிகளுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர்க் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வியன்னாவிலிருந்து புறப்பட்ட அந்த ரயில் ஹெம்பர்க், ஆம்ஸ்டர்டாம் ஆகிய நகரங்களுக்குச் சென்றுகொண்டிருந்தது.

ஆஸ்திரியாவின் மலைப்பகுதிகளுக்கு அருகே உள்ள சுரங்கத்தில் ரயிலின் மேல்பகுதியில் இருந்த கம்பி அறுந்துபோனதாக OeBB ரயில் நிர்வாகத்தின் பேச்சாளர் கூறினார்.

அதன் காரணமாக ரயிலில் இருந்த சில வாகனங்கள் தீப்பற்றின. தீ அணைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர.

Exit mobile version