இலங்கை

கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றார்

கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக ஞானகுணாளன் போல் ரொஷான் கடமைகளை பொறுப்பேற்றார்.

வைத்தியர் ஞானகுணாளன் போல் ரொஷான், மருத்துவ நிர்வாக முதலாம் நிலை கலாநிதி பட்ட பயிற்சியினை (M.D. in Medical Administration Part 1) நிறைவு செய்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன் மொறவெவ ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றினார்.

 

காட்டு யானைகளின் தாக்குதல்களினால் பின்தங்கிய நிலைமையிலிருந்த மொறவெவா வைத்தியசாலையை தனது வழிகாட்டலின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் சிறந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் என்ற ஸ்தானத்திற்கு கொண்டு வந்தார்.

இவர் மருத்துவ நிர்வாக முதுகலை மாணி பட்டப்பயிற்ச்சியின் (M.Sc. in Medical Administration) பின் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றியுள்ளார். அங்கு அவர் கடமையாற்றிய குறுகிய காலத்தினுள் பல துரித அபிவிருத்தி செயற்திட்டங்களை தனது வழிகாட்டலின் கீழ் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

See also  இலங்கை: காதல் விவகாரத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞன்! நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

இவர் வைத்திய இளமானி பட்டம் மற்றும் மருத்துவ நிர்வாக முதுகலை மாணி பட்டம் (M.Sc. in Medical Administration) என்பவற்றிற்கு மேலதிகமாக வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார சேவைகளில் நிபுணத்துவ வணிக முகாமைத்துவ முதுகலைமாணி பட்டம் (MBA in Hospital & Health Services Management) (ஐக்கிய இராச்சியம்), சுகாதார தரநிலை மற்றும் நோயாளர் பாதுகாப்பு பட்டப்பின்படிப்பு டிப்ளோமா (PG Dip in Healthcare Quality & Patient Safety) (கொழும்பு பல்கலைக்கழகம்), சுகாதார தகவல் தொழில்நுட்ப துணை நிபுணத்துவ பட்டம் (Specialisation in Healthcare IT Support) (ஐக்கிய அமெரிக்கா), சுகாதாரத்துறைக்கான செயற்கை நுண்ணறிவுகளின் நெறிமுறைகள் மற்றும் ஆளுகை தொடர்பான பட்டம் (Ethics and Governance of Artificial Intelligence for Health) (உலக சுகாதார ஸ்தாபனம்) போன்றவற்றை நிறைவு செய்ததுடன் தற்போது சுகாதார அபிவிருத்தி பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பயிற்ச்சியினையும் (PG Dip in Health Development) (கொழும்பு பல்கலைக்கழகம்) தொடர்கின்றார்.

See also  சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதி திட்டம்

இவரது பெற்றோர்கள் (வைத்திய கலாநிதி திரு மற்றும் திருமதி ஞானகுணாளன்) கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட மருத்துவ நிர்வாகிகளாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், திருகோணமலை பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் போன்ற பதவிகளில் கடமையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் ஞானகுணாளன் போல் ரொஷான், திருகோணமலை இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியின் பழைய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்

(Visited 22 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content