இலங்கை

யாழில் அதிக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள்… படு மோசமான செயல்கள் அம்பலம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் சொந்த வாகனங்கள் இல்லாத மக்கள் முச்சக்கர வணிடிகளில் பயணத்தை மேற்கொள்ள அச்சமடையும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகமாக உள்ளன.

ஒரு சில சாரதிகள் மனசாட்சி என்பதே இல்லாமல் பணம் வசூலிப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலையில், யாழ். மாவட்ட முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீட்டர் பொருத்தப்பட்டால் பயணிக்கும் மக்களுக்கு கட்டணம் அதிகளவில் வராது. நியாயமான தொகையாக இருக்கும்.

ஆனால் கொல்லை பணத்திற்கு ஓடி உழைத்த முச்சக்கர வணிடி சாரதிகளுக்கு மீட்டர் மூலம் வரும் போதுமானதாக இல்லை. இதனால் பெயருக்கு மீட்டர் பொருத்தி விட்டு பழைய முறையிலேயே செல்வதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

மீட்டரை பொருத்தி விட்டு ஓடினாலும், இறங்கும் போது இந்த கொலை போதாது என்று கூறி, அவர்கள் கேட்கும் பணத்தை தருமா சண்டை போடுவதையும் நாம் சில சந்தர்ப்பங்களில் அவதானித்தோம்.

இதேவேளை, தூர பயணங்கள் அல்லாத பயணங்களுக்கு மீட்டரில் குறிக்கும் தொகைக்கு வர முடியா என்று கூறி, அவர்கள் ஒரு தொகையை கூறுகின்றனர். வேறு வழியில்லாமல் அப்பாவி மக்களும் அவர்கள் கூறும் தொகைக்கு செல்கின்றனர்.

இவ்வாறாக யாழ்ப்பாணத்தில் முச்சக்கரவண்டி சாரதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இவ்வாடயம் பூதாகரமாக வெடித்துள்ளது.

இது தொடர்பில், யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை (27) மாலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், மாவட்ட செயலர், பொலிஸார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை (27) மாலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், மாவட்ட செயலர், பொலிஸார் உள்ளிட்டோர் நடாத்திய சந்திப்பின் போதே பொலிஸார் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.

”யாழ்ப்பாணத்தில் தற்போது அறிமுகமாகியுள்ள தனியார் போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறைந்தளவு கட்டணங்களை வசூலிக்கின்றன.

அதனால் நீண்ட காலமாக சேவையில் ஈடுபடும் எமது வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே நாம் பெரும் தொகை பணத்தினை செலவழித்து மீட்டர் கருவியை பொருத்தினோம்.

அப்படியிருந்தும் அந்நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளே அதிக சேவைகளில் ஈடுபடுவதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது ”என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த மாவட்ட செயலர், ”சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் மீட்டர் பொருத்துவது என்பது கட்டாயம். அதனையே நாமும் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

அதேவேளை உரிய அனுமதிகளை பெற்று சேவையில் ஈடுபடும் எந்த முச்சக்கர வண்டிகளையும் தடுக்க முடியாது. அதேபோல் , போக்குவரத்து சேவையை வழங்கும் தனியார் நிறுவனத்தை தடுக்கும் அதிகாரம் இல்லை.

மீட்டர் பொருத்தி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொதுமக்களால் தினமும் முறைப்பாடுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தனியார் நிறுவனம் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் இதுவரையில் எந்த முறைப்பாடும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை” என தெரிவித்தார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content