இலங்கை

திருகோணமலையில் கெப் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளான முற்சக்கர வண்டி ;கணவன் மனைவி படுகாயம்

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி கிளிவெட்டி 58ம் கட்டை பகுதியில் கெப் வாகனமும், முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்த கணவர், மனைவி இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்த- மந்தனபுர பகுதியில் வசித்து வரும் டபிள்யு. எம்.சேனககுபண்டார (39) மற்றும் அவரது மனைவி எச்.எம்.நிலந்தி (34) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த கெப் வாகனமே மோதியதாகவும், கெப் வாகனத்தில் நான்கு பேர் இருந்ததாகவும் அதில் ஒருவர் வேட்டியுடன் இருந்ததாகவும் அவர் ஒரு அரசியல்வாதியாக இருக்கலாம் எனவும் விபத்தை நேரில் கண்டவர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வானத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content