Site icon Tamil News

மஹாபாவை சுட்டவர் உட்பட மூவர் கைது

மஹாபாவில் இறைச்சிக் கடை உரிமையாளரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட குற்றவாளி எனக் கூறப்படும் வெல்லே சாரங்கேயின் மைத்துனரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய பிரதான சந்தேக நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் இராணுவத்தினர் இருவர் மற்றும் செயற்படும் படைவீரர் ஒருவரும் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தற்போது கடமையாற்றும் கோப்ரல் ஒருவரை கைது செய்ய சென்றுள்ளனர்.

அவர் பணிபுரியும் மட்டக்களப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், அம்பாறைப் பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version