செய்தி தமிழ்நாடு

மது குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்ற ஆயிரக்கணக்கான பெண்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வீரக்குடி நாட்டைச் சேர்ந்த கருக்காகுறிச்சியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.செல்லியம்மன் ஸ்ரீ.அகோர வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 27 ஆம் தேதி காப்பு கட்டுதழுடன் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கோவில் மண்டக படிதாரர்களால் செல்லியம்மன் அகோர வீரபத்திரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்த நிலையில் பக்தர்கள் பால்குடம், காவடி, பறவைகாவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று கருக்காக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கரு.வடதெரு,கரு.தெற்க்கி தெரு, பட்டத்திக்காடு, காளகொள்ளை, வாணக்கன்காடு பெரியாவிடுதி,

கண்ணியான் கொல்லை வாண்டான் விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று,

கும்மியடித்து மேள தாள இசை முழங்க அலங்கரிக்கப்பட்ட குடத்தில் தென்னம்பாளைகளை வைத்து தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று,

See also  இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி!

நொண்டி அய்யனார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று செல்லியம்மன் அகோர வீரபத்திரர் கோவிலை சென்றடைந்து மது குடங்களை வைத்து வழிபட்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

(Visited 13 times, 1 visits today)
Avatar

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content