ஐரோப்பா

பிரான்ஸில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸார்

 

பிரான்ஸில் பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக பயணித்த சாரதி ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்லின் நகரில் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட வாகனம் ஒன்று வீதியில் பயணிப்பதை பார்த்த பொலிஸார் குறித்த வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் அதனைச் செலுத்திச் சென்ற 19 வயதுடைய இளைஞன் ஒருவர் மகிழுந்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார்.

அத்தோடு அவர் பொலிஸார் மீது வாகனத்தை மோத முற்பட்டுள்ளார். அதையடுத்து பொலிஸார் வாகன சாரதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் குறித்த இளைஞன் காயமடைந்துள்ளார்.

உயிருக்கு போராடும் நிலையில் இளைஞன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

முதல்கட்ட விசாரணைகளில் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 12 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content