Site icon Tamil News

பிரான்ஸில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸார்

 

பிரான்ஸில் பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக பயணித்த சாரதி ஒருவர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்லின் நகரில் இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட வாகனம் ஒன்று வீதியில் பயணிப்பதை பார்த்த பொலிஸார் குறித்த வாகனத்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் அதனைச் செலுத்திச் சென்ற 19 வயதுடைய இளைஞன் ஒருவர் மகிழுந்தை நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளார்.

அத்தோடு அவர் பொலிஸார் மீது வாகனத்தை மோத முற்பட்டுள்ளார். அதையடுத்து பொலிஸார் வாகன சாரதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் குறித்த இளைஞன் காயமடைந்துள்ளார்.

உயிருக்கு போராடும் நிலையில் இளைஞன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

முதல்கட்ட விசாரணைகளில் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version