ஐரோப்பா

சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்; கலவரத்தில் ஈடுபட்ட 667 பேர் கைது

17 வயது சிறுவன் பொலிஸாரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்த நிலையில் 667 பேர் வரை கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நாண்டெர்ரே என்ற புறநகர் பகுதியில் நெயில் எம் என்ற 17வயது சிறுவன் பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் உயரடுக்கு வீரர்கள் மற்றும் GIGN குழுக்களை சேர்ந்த 40,000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் நேற்று உட்படுத்தப்பட்டனர்.தலைநகர் பாரிஸில் மட்டும் 9000 பேருக்கு எதிராக 5000 பொலிஸார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

France sees third night of violence after 17-year-old shot dead by police |  Nation & World News | komu.com

இதற்கிடையில் நேற்று இரவு பிரான்ஸின் சில நகரங்களில் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட மூன்று நாட்களாக நடைபெற்று வரும் கலவரத்தில் 249 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரஸ்ஸல்ஸில் நடைபெற இருந்த கூட்டத்திற்கு செல்லும் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு, நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலையை கட்டுபடுத்துவதற்கான அவசர கூட்டத்தை இன்று நடத்தவுள்ளார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content