இலங்கை

வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக சில காலத்திற்கு கார்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக, மிகவும் திட்டமிட்டு, நுணுக்கமாக இறக்குமதி விதிகளை தளர்த்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்று (06.02) கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியின் போது, ​​இறக்குமதி கட்டுப்பாட்டு விதிகள் கட்டம் கட்டமாக, மிகவும் திட்டமிட்டு, நுணுக்கமாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

உதாரணமாக, சில காலத்திற்கு மோட்டார் வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வது சாத்தியம் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
See also  இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content