இலங்கை செய்தி

நாடு பிளவுபட்டதன் காரணமாகவே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது – அனுர

இலங்கையில் இனவாதத்திற்குப் பதிலாக புதிய தேசிய ஐக்கிய அரசியல் ஸ்தாபிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

1947ல் சுதந்திரம் பெற்ற இந்தியா, பல்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு மதங்களை நம்பி, பிராந்திய ரீதியாக பிளவுபட்ட ஒரு மாநிலமாக இருந்தது, ஆனால் இந்தியாவின் தேசிய தலைவர்கள் மக்களை ஒரே கொடியின் கீழ் கொண்டு வர முயற்சித்தார்கள்.

அதன் விளைவாக அப்துல் கலாம் போன்ற ஒருவர் ஜனாதிபதியானார், மனமோகன் சிங் போன்ற ஒருவர் தான் பிரதமரானார் என்றும், ஜாதி இல்லாத பெண் ஜனாதிபதியானார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் லண்டனில் நடைபெற்ற இலங்கைப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும் 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இலங்கையில் 1948 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் பிரிவினை அரசியல் இருந்ததாகவும், இதன் விளைவாக 30 வருடகால யுத்தம் இடம்பெற்று பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாகவும் அனுரகுமார திஸாநாயக்க கூறுகிறார்.

அதன் பின்னரான ஈஸ்டர் தாக்குதலும் பிரிவினை அரசியலின் விளைவே என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிவினை அரசியலை மாற்றி இலங்கையில் இனவாதத்திற்குப் பதிலாக தேசிய ஒருமைப்பாட்டு கொடி பிடிக்கும் புதிய அரசியல் உருவாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content