இலங்கை செய்தி

தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டமை சக்தி வாய்ந்தவர்களின் செயலாகும் – பேராயர் கர்த்தினால்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டமை இந்த நாட்டிலுள்ள சக்தி வாய்ந்தவர்களின் செயலாகும் என கொழும்பு பேராயர் மேதகு மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அந்த தேவாலயத்தில் இன்று (14) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனவரி 11, 2022 அன்று, பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்று காலை கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் தலைமையில் விசேட ஆராதனை ஒன்று இடம்பெற்றது.

ஆராதனையின் பின்னர் பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்திற்கு முன்பாக அமைதியான போராட்டமும் நடத்தப்பட்டது.

தேவாலயத்தில் கைக்குண்டு வைத்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
See also  39 வருடங்களுக்கு பிறகு இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content