உலகம் செய்தி

ரஷ்யாவில் பயங்கவரவாத தாக்குதல்!! 150 பேர் பலி

ரஷ்யாவின் மாஸ்கோ அருகே உள்ள குரோகஸ் நகரில் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்த தியேட்டர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள குரோகஸ் நகர மண்டபத்தில் நேற்று (22) இரவு நடைபெறவிருந்த இசைக் கச்சேரிக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளை பயன்படுத்தியும் கைக்குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

அந்த நேரத்தில், பிரபல ரஷ்ய ராக் இசைக்குழு பிக்னிக்கின் இசையை ரசிக்க கிட்டத்தட்ட 6,200 பேர்  அரங்கில் கூடினர்.

கொடூரமான தாக்குதலை நடத்திய பிறகு, பயங்கரவாதிகள் அரங்கை விட்டு வெளியேறி தீ வைத்து எரித்தனர்.

மண்டபத்தின் மேற்கூரையில் வேகமாக பரவிய தீயை அணைக்க அதிகாரிகள் சுமார் 50 ரஷ்ய தீயணைப்பு வாகனங்களை அனுப்ப வேண்டியிருந்தது.

இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ரஷ்யாவில் பதிவாகிய மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிறிஸ்தவ கூட்டங்களை குறிவைப்பதே அவர்களின் நோக்கம் என்று ஐஎஸ்ஐஎஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய தீவிரவாதி அந்த இடத்தை விட்டு வெளியேறுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என ரஷ்ய பாதுகாப்புப் படையினர் சந்தேகித்து, அவர்களது புகைப்படங்களை விரைவில் ஊடகங்களில் வெளியிட்டனர்.

எனினும், ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த 7ம் திகதி ரஷ்யாவில் பெரிய கூட்டம் அல்லது இசை நிகழ்ச்சிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்திருந்தது.

அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் ஒன்று கூடுவதையும், இசை நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இருப்பினும், ரஷ்ய அதிபர் புடின், மேற்குலகின் தவறான எச்சரிக்கை என்று கூறி, புறக்கணித்தார். தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்யாவிலும், பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளிலும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது .

(Visited 6 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content