இலங்கை செய்தி

நேரலை பாலியல் காட்சிகளில் தோன்றும் இலங்கையர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை இளைஞர்கள் யுவதிகளின் நேரடி பாலியல் வீடியோக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் காணொளிகள் மூலம் இலாபம் ஈட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் சமீபகாலமாக இவ்வாறான செயற்பாடுகள் அதிகமாகப் பதிவாகி வருவதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் இந்தச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் தொடர்பில் கணிசமான எண்ணிக்கையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் நேரடி பாலியல் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு அவற்றை பதிவு செய்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கணிசமான இலாபம் ஈட்டி வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இந்த வீடியோக்கள் பாலியல் காட்சிகள் அடங்கிய இணையதளங்களில் வெளியாகி உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சீன நிறுவனத்திற்கு பாலியல் காட்சிகளை நேரடியாக விற்கும் பெரிய அளவிலான மோசடியை பொலிசார் கண்டுபிடித்தனர்.

பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பிலியந்தலை, படகத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இளம் ஜோடி மற்றும் அதே வீட்டில் இருந்த மற்றுமொரு கணவன், மனைவி தம்பதியினர்  இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோக்களுக்காக அந்நிறுவனம் தங்களுக்கு 50,000 முதல் 100,000 வரை பணம் கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content