Site icon Tamil News

நேரலை பாலியல் காட்சிகளில் தோன்றும் இலங்கையர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கை இளைஞர்கள் யுவதிகளின் நேரடி பாலியல் வீடியோக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் காணொளிகள் மூலம் இலாபம் ஈட்டக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் சமீபகாலமாக இவ்வாறான செயற்பாடுகள் அதிகமாகப் பதிவாகி வருவதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் இந்தச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் தொடர்பில் கணிசமான எண்ணிக்கையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் நேரடி பாலியல் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு அவற்றை பதிவு செய்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து கணிசமான இலாபம் ஈட்டி வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இந்த வீடியோக்கள் பாலியல் காட்சிகள் அடங்கிய இணையதளங்களில் வெளியாகி உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சீன நிறுவனத்திற்கு பாலியல் காட்சிகளை நேரடியாக விற்கும் பெரிய அளவிலான மோசடியை பொலிசார் கண்டுபிடித்தனர்.

பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பிலியந்தலை, படகத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த இளம் ஜோடி மற்றும் அதே வீட்டில் இருந்த மற்றுமொரு கணவன், மனைவி தம்பதியினர்  இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோக்களுக்காக அந்நிறுவனம் தங்களுக்கு 50,000 முதல் 100,000 வரை பணம் கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version