வட அமெரிக்கா

கனடாவில் இந்திய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

கனடாவில் கெலோனாவில் மத்திய ஒகனகன் பகுதியில் செயல்பட்டு வரும் ரட்லாண்ட் மேல்நிலைப் பாடசாலையில் இந்தியாவை சேர்ந்த 17 வயது சீக்கிம் மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளது.

இவர் பேரூந்துக்காக அப்பகுதி முன்பாக காத்திருந்துள்ளார். அப்போது இரண்டு கனடா நாட்டவர்கள் மாணவரை பேருந்தில் ஏற விடாமல் தடுத்துள்ளனர்.

அதன் பின்னர், அந்த மாணவர் பேருந்தில் ஏறியதும், அவர்களும் உள்ளே எறியுள்ளனர். ஆனால் மாணவரை வாய்மொழியாக மிரட்டி, பின்னர் பேருந்தை விட்டு கிழே இறங்கியுள்ளனர். இறங்கிய அந்த இந்திய மாணவரை அந்த கும்பல் தாக்க தொடங்கியுள்ளது.

பேருந்து முன்னரே அந்த மாணவரை கும்பல் தாக்கியுள்ளது. மேலும் மிளகாய் பொடி போன்றவற்றை அந்த மாணவர் மீது தூவி காயப்படுத்தியுள்ளது.

இதனை தடுக்க முயன்ற ஒரு மாணவியும் தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பலர் மொபைல் போன்களில் பதிவு செய்தனர் என்று கனடாவின் உலக சீக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது.

கெலோனாவில் இந்திய நாட்டவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறது என்றும், மேலும் இந்த சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனடிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது என்றும் இந்திய துணைத் தூதரகம் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content