Site icon Tamil News

புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி 18 பேர் காயம்!

புளோரிடாவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (29.10) இடம்பெற்றுள்ளது.

நகர வீதியொன்றில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துடன்  18 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல மதுக்கடைகள் மற்றும் கிளப்புகளைக் கொண்ட ஒரு பகுதியில் இந்த சண்டை நிகழ்ந்துள்ளது.  துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏதேனும் மதுக்கடைகளுக்குள் இருந்தார்களா என்பது  குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“இது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பம் அல்லது சண்டையால் ஏற்பட்ட விபரீதம் என பொலிஸார் கூறியுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அறிவித்துள்ளனர்.

Exit mobile version