இலங்கை

பசிலுக்கும் – ரணிலுக்கும் இடையில் இரகசிய கலந்துரையாடல்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் இந்த கலந்துரையாடல் நீடித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பசில் ராஜபக்ஷவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து ஜனாதிபதிக்கும், பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. இந்த சூழலில் தற்போது மீண்டும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content