இலங்கை

விமல் வீரவன்சவுக்கு எதிரான கடவுச்சீட்டு வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு செயலிழந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்வதற்கான விசா அடங்கிய காலாவதியான கடவுச்சீட்டை வழங்கியுள்ளதாகவும், ஆனால் கடவுச்சீட்டின் நிலை குறித்து விமான நிலையத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர் புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பெற்று மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

முதன்முறையாக காலாவதியான கடவுச்சீட்டுடன் எம்.பி வந்த போது விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்ய தவறியதாகவும், அதற்கு பதிலாக புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுடன் வந்த போது அவரை கைது செய்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்சவின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

பழைய கடவுச்சீட்டில் செல்லுபடியாகும் வீசாவைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுடன் பயணிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை வழக்கில் இருந்து விடுவித்தது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content