Site icon Tamil News

விமல் வீரவன்சவுக்கு எதிரான கடவுச்சீட்டு வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடவுச்சீட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு செயலிழந்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச வெளிநாடு செல்வதற்கான விசா அடங்கிய காலாவதியான கடவுச்சீட்டை வழங்கியுள்ளதாகவும், ஆனால் கடவுச்சீட்டின் நிலை குறித்து விமான நிலையத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர் புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டைப் பெற்று மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

முதன்முறையாக காலாவதியான கடவுச்சீட்டுடன் எம்.பி வந்த போது விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் அவரை கைது செய்ய தவறியதாகவும், அதற்கு பதிலாக புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுடன் வந்த போது அவரை கைது செய்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்சவின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

பழைய கடவுச்சீட்டில் செல்லுபடியாகும் வீசாவைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுடன் பயணிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை வழக்கில் இருந்து விடுவித்தது.

Exit mobile version