ஒரு வாரத்திற்கு முன்பு தெற்கு ஸ்வீடன் கடற்கரையில் பால்டிக் கடலில் மூழ்கி பெரும் எண்ணெய் கசிவை ஏற்படுத்திய பயணிகள் படகு மார்கோ போலோ மீண்டும் எண்ணெய் கசியத் தொடங்கியதாக ஸ்வீடிஷ் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
புதிய எண்ணெய் கசிவின் அளவை இன்னும் மதிப்பிட முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த வாரத்தில் சுமார் 25,000 லிட்டர் எண்ணெய் மற்றும் எண்ணெய் கசிவு மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. ஸ்வீடன் அதிகாரிகளின் கூற்றுப்படி, கசிவை முழுமையாக சுத்தம் செய்ய ஒரு வருடம் வரை ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.