இலங்கை: ஹொரணையில் துப்பாக்கிச் சூடு! பொலிஸார் தீவிர விசாரணை
ஹொரணை – கிரேஸ்லேண்ட் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவர் இரட்டை வண்டியில் வந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 8 times, 1 visits today)