இலங்கை புகைப்பட தொகுப்பு

கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் புதிய மருத்துவ ஒக்சிசன் நிலையம் அங்குரார்ப்பணம்

திருகோணமலை- கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் புதிய மருத்துவ ஒக்சிசன் நிலையம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அவுஸ்திரேலியாவின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த ஒக்சிசன் தொகுதியானது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் UNOPS சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் ஊடாக நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த ஒக்சிசன் தொகுதியானது சுமார் 600,000 அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ 20 கோடி ரூபாய்கள்) பெறுமதியானது.

இந்த ஒக்சிசன் நிலையானது.ஒரு நாளைக்கு 70 பெரிய சிலிண்டர்களை (Jumbo Cylinders) 95% தூய்மையுடன் நிறப்பும் திறன் கொண்டது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் போல் ரொஷான் இதை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் UNOPS நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)
See also  அநுரவின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை - அரசாங்கத்தில் புதிய பதவிகள்
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content