Tamil News

இரட்டை குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா

நடிகை நயன்தாரா தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன், நேரம் செலவிடும் அழகிய தருணங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா, தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனை 2015-ஆம் ஆண்டு காதலிக்க துவங்கினார்.

ஆனால் நயன் – விக்கி இருவரும் காதலிக்க துவங்கிய ஒரே வருடத்தில் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டதாக சரகேசி பிரச்சனை வந்தபோது, நீதி மன்றத்தில் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

மேலும் திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு மேல் ஆன பின்னரே… வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று கொண்டதாகவும் தெரிவித்தனர்.

குழந்தை பிறந்த பின்னர், ஒரு பொறுப்பான அம்மாவாகவும் இருந்து வரும் நயன்தாரா தற்போது தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுளளார்.

இதில் நயன்தாரா தன்னுடைய இரட்டை குழந்தைகள் மீதும் பாசத்தை பொழிவது மட்டும் இன்றி, அவர்களுக்கு விளையாட்டு காட்டுவது, கட்டி அரவணைத்து கொள்வது போன்ற புகைப்படங்கள் உள்ளன.

நயன்தாரா தன்னுடைய வேலைக்கு செல்வதற்கு முன், சில மணிநேரம் குழந்தைகளுடன் விளையாடியபோது என கூறி, இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version