தென் அமெரிக்கா

பெருவில் 3,400க்கும் அதிகமான பெண்கள் மாயம்!

பெருவில் 3,400க்கும் அதிகமான பெண்களைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 1,902 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டனர். எஞ்சிய 1,504 பேரை இன்னும் காணவில்லை. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் இவர்கள் காணாமல் போயுள்ளார்.

அத்தகைய நிகழ்வுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. காணாமல்போனவர்களில் பெரும்பாலானோர் கடத்தப்படுபவர்கள் என்று கூறப்பட்டது.

இருப்பினும் அந்தப் பிரச்சினைக்கு பெருவின் அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 5,380க்கும் அதிகமான பெண்கள் காணவில்லை எனப் புகார் செய்யப்பட்டது.

அவர்களில் பெரும்பகுதியினர் இளம் பெண்களும் பதின்ம வயதுப் பெண்களும் என்று கூறப்பட்டது.

பெண்கள் விருப்பத்துடன் ஓடிப்போகின்றனர் என்ற எண்ணத்தில் காவல்துறையினர் அந்தச் சம்பவங்களைப் போதுமான அளவு விசாரிப்பதில்லை எனப் பல்வேறு அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள் கூறுகின்றன.

 

(Visited 11 times, 1 visits today)
See also  Mercedes-Benz நிறுவனத்திற்கு அபராதம் விதித்த பிரேசிலிய தொழிலாளர் நீதிமன்றம்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த

You cannot copy content of this page

Skip to content