ஆபத்தில் உள்ள 140 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள்!
இடைவிடாத வெப்ப அலை காரணமாக 140 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வெப்ப எச்சரிக்கையின் கீழ் உள்ளனர்.
சமீபத்திய வாரங்களில் தென் மாநிலங்களில் வெப்பம் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நியூயார்க் நகரம் மற்றும் வடகிழக்கு நியூ ஜெர்சி போன்ற நகரங்களில் இரவு நேர வெப்பநிலை 75 முதல் 80 டிகிரி வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
வெப்ப அலை கிழக்கு நோக்கி ஊர்ந்து செல்வதால், மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் இப்போது ஆபத்தான அதிக வெப்பநிலையை அனுபவித்து வருகின்றன.
(Visited 8 times, 1 visits today)