இலங்கை

ஜப்பான் தூதரக அதிகாரிகளுக்கும் – ஐ.எப் ஊடகவியலாளருக்கும் இடையே சந்திப்பு

ஜப்பான் தூதரக அதிகாரிகளுக்கும்- ஐ.எப்.ஊடக வலையமைப்பின் பிராந்திய ஊடகவியலாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை அலஸ்தோட்டம் லோட்டஸ் பாக் ஹோட்டலில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையின் தற்போதைய நிலவரம், மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஜப்பான் தூதரக ஆராய்ச்சியாளரும்,ஆலோசகருமான Kana Moriwaki மற்றும் தூதரக அதிகாரியின டி.பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இக்கலந்துரையாடலின் போது ஜப்பான் ஊடகவியலாளர்கள் செயற்படும் விதம் குறித்தும் தற்போது இலங்கையில் வசித்து வரும் ஊடகவியலாளர்களின் நிலைமை தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களின் நலன் கருதி ஜப்பான் தூதரக உதவியுடன் பயிற்சி செயலமர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் அப்துல்சலாம் யாசீம் தெரிவித்தார்.

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content