பொழுதுபோக்கு

பாடகியுடனான தொடர்பு குறித்து உண்மையை போட்டுடைத்தார் ஜெயம் ரவி

மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி ஜெயம்ரவி வழக்கு தொடர்ந்த நிலையில், பாடகி கெனிஷாவுடனான உறவே ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவுக்கு காரணம் என்ற செய்தி பரவி வரும் நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் ஜெயம்ரவி.

அவர் கூறுகையில்,

‘நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த ஒரு லாஜிக்கும் இல்லை, அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன், அவர்கள் தரப்பில் இருந்து அதுகுறித்து பேசியும் இருக்கிறார்கள்.

இவ்வளவு நடந்தும் தனக்கு இது பற்றி தெரியாது என்று அவர் கூறுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன், சட்டரீதியாக செல்கிறேன்.

பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அவர் ஒரு சைக்காலஜிஸ்ட் எத்தனையோ பேரை மனஅழுத்தத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்.

அவரோடு ஒரு ஹீலிங் சென்டர் ஒன்றை ஆரம்பிக்க நான் முடிவு செய்ததை தகர்க்கும் எண்ணத்தோடு இப்படி பேசுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி பேசுவது மிகவும் தவறு, நான் சட்டத்தை நம்புகிறேன் இதற்கு சரியான நியாயம் கிடைக்கும்’ என்று விளக்கமளித்தார்.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content