பொழுதுபோக்கு

Jailer 2: ரஜினி, நெல்சன் கூட்டணி கம்பேக்… மக்களே நீங்க தயாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜெயிலர் 2ம் பாகம் பற்றி தரமான அப்டேட் வெளியாகியுள்ளது.

ரஜினியின் ஃபேன் பாய் சம்பவமாக உருவான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் ரஜினி, நெல்சன், அனிருத் மூவருக்கும் சொகுசு கார்களை பரிசாக கொடுத்து அசத்தினார் கலாநிதி மாறன்.

அப்போதே ஜெயிலர் 2ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. அதே ரஜினி, நெல்சன், அனிருத் காம்போவில் ஜெயிலர் 2 ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகின.

ரஜினியோ தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த கேப்பில் ஜெயிலர் 2 ஸ்க்ரிப்ட்டை ரெடி செய்துவிட படக்குழு தரப்பில் இருந்து நெல்சனுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது.

See also  “புஷ்பா" டைரக்டர்க்கு எல்லாமே தெரியும்... குண்டை தூக்கி போட்ட ஜானி மாஸ்டர்

இதனால் உற்சாகமான நெல்சன், ஜெயிலர் 2 ஸ்க்ரிப்ட் வேலைகளை தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்டது.

ஆனாலும் அதுபற்றி அபிஸியலாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜெயிலர் 2 ஸ்க்ரிப்ட் ஒர்க் பற்றி நடிகை மிர்னா மேனன் அப்டேட் கொடுத்துள்ளார். ஜெயிலர் முதல் பாகத்தில் வசந்த் ரவியின் மனைவியாகவும் ரஜினிக்கு மருமகளாகவும் நடித்து கவனம் ஈர்த்தவர் மிர்னா மேனன்.

முதல் பாகத்தில் வசந்த் ரவியை ரஜினி கொலை செய்துவிடுவதாக க்ளைமேக்ஸ் இருந்தது. ஆனால் மிர்னா மேனன் கேரக்டருக்கு முடிவு கொடுக்கவில்லை.

இதனால் அவரது கேரக்டர் ஜெயிலர் 2வில் இருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல் அவரது கால்ஷீட்டையும் நெல்சன் வாங்கியுள்ளாராம். இதுபற்றி சமீபத்திய பேட்டியொன்றில் கூறிய மிர்னா மேனன், ஜெயிலர் 2 ஸ்க்ரிப்ட் வேலைகளில் நெல்சன் பிஸியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதோடு தானும் ஜெயிலர் 2வில் நடிக்கவுள்ளதாக கூறியது ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. தலைவர் 171 முடிந்ததும் ஜெயிலர் 2 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content