இலங்கை செய்தி

இலங்கையில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்

எதிர்காலத்தில் பணவீக்கம் பெரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், அதன் தாக்கம் மக்கள் மீது பெரிய அளவில் இருக்கும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

தற்போது வரி விதிக்கப்படாத பல வகைப் பொருட்களுக்கு வரி விதிப்பதாலும், ஏற்கனவே வரி விதிக்கப்படும் பொருட்களின் மீதான வரிச்சுமை அதிகரிப்பதாலும் எதிர்காலத்தில் பணவீக்கம் உயரும் என பேராசிரியர் தெரிவித்தார்.

ஜனவரி 1 ஆம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்பட்டதன் விளைவுகளை மக்கள் ஏற்கனவே அனுபவித்து விட்டதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

வற் வரி அதிகரிப்பினால் பொருட்களின் விலை அதிகரிப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்காக சில வர்த்தகர்கள் ஏற்கனவே பொருட்களை சேமித்து வைத்து பின்னர் விற்பனை செய்ய முற்படுவதாக பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

வரி விதிப்பதன் மூலம் வர்த்தகர்கள் தேவையற்ற அனுகூலங்களைப் பெறுவதைத் தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் உள்ளது என சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content