இலங்கை செய்தி

இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா திட்டம்

இலங்கையில் இந்திய ரூபாயில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிக்க இந்திய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாத இந்திய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனங்கள் இலங்கை சந்தையில் நுழைவதற்கு ரூபா முதலீட்டு பாதை இலகுவான நடவடிக்கையாக அமையும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நோக்கம் இந்திய ரூபாயை முறையாக சர்வதேசமயமாக்குவதும், உலக வர்த்தகத்தில் இந்திய ஏற்றுமதியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதை இலகுவாக்கும் வகையில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்பட இந்திய அரசாங்கம் தற்போது நம்புவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content