Site icon Tamil News

இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா திட்டம்

இலங்கையில் இந்திய ரூபாயில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை அதிகரிக்க இந்திய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாத இந்திய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனங்கள் இலங்கை சந்தையில் நுழைவதற்கு ரூபா முதலீட்டு பாதை இலகுவான நடவடிக்கையாக அமையும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நோக்கம் இந்திய ரூபாயை முறையாக சர்வதேசமயமாக்குவதும், உலக வர்த்தகத்தில் இந்திய ஏற்றுமதியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதை இலகுவாக்கும் வகையில் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்பட இந்திய அரசாங்கம் தற்போது நம்புவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version