இந்தியா

தெலுங்கானாவில் கள்ளக்காதல் மீதுள்ள மோகத்தால் தாய் செய்த செயல்…!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது 4 வயது மகளை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் தெலங்கானா ஐதராபாத் தராபாத், குஷாய் குடாவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்யாணி(22). இவர் டிரைவர் வேலை செய்து வருகிறார்.இவர்கள் இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. பின்பு 2019 ஆம் ஆண்டு தன்விதா என்ற பெண்குழந்தை பிறந்தது. தற்போது, அந்த குழந்தைக்கு 4 வயது ஆகிறது.இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் இவர்கள் 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

இதனையடுத்து கல்யாணி, பெற்றோர் ஊரான செங்கன் மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு சென்றிந்தார். அங்கு அவருக்கு நவீன் குமார் என்ற 19 வயது இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கல்யாணி, பெற்றோர் இல்லாத சமயத்தில் நவீன் குமாரை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாய் இருந்துள்ளார்.

அப்போது, அவர்களுடைய கள்ளக்காதலுக்கு தன்விதா இடையூறாக இருந்துள்ளார், பின்பு குழந்தையை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.இதனையடுத்து, உடல்நிலை சரியில்லாமல் குழந்தை இறந்து போனதாக கல்யாணி கூறியுள்ளார்.

குழந்தையின் இறப்பில் சந்தேகமடைந்த ரமேஷ் பொலிசில் புகார் அளித்தார். பின்பு, கல்யாணியை விசாரணை செய்த போது குழந்தையை கொன்றதாக தெரியவந்தது.இதனையடுத்து, கல்யாணியை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content