Tamil News

“என் உடம்புக்கு எத்தனை கோடி தருவ?” பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள ரேகா நாயரின் பேச்சு

சின்னத்திரையில் அறிமுகமான ரேகா நாயர் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பார்திபன் இயக்கத்தில் நடித்த இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

தனது மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடும் பழக்கம் உடைய ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை பீச்சில் வைரத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

இந்நிலையில், அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் மட்டும் இந்த அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை இல்ல எல்லாத்துறையிலும் இருக்கு. ஆனால், சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் அப்பட்டமாக தெரிகிறது.

அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால், ஐ போன் வாங்கலாம், சொகுசு கார் வாங்கலாம், ஈசியார்ல வீடு வாங்கலாம் என நடிகைகள் நினைத்துக் கொண்டு அட்ஜெஸ்ட்மென்ட் செய்கிறார்கள்.

என்னிடம் யாரவது பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் படுக்கைக்கு அழைக்கிறார் என்றால் அந்த நபரை பிடித்து இருந்தால் போவேன், அவரை பிடிக்கவில்லை என்றால் போகமாட்டேன்.

சரக்கு அடிக்கக்கூடாது, கஞ்சா அடிக்கக்கூடாது என்று நான் எனக்குனு ஒரு ரூல் வெச்சி இருக்கிறேன். என்கிட்ட வந்து அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொன்ன…. என் உடம்புக்கு எத்தனை கோடி தருவனு கேட்பேன், அவனால முடியாது மூடிக்கிட்டு போய்டுவான்.

அதே போல பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் போது மறுத்துவிட்டாள் உங்களை யாரும் வற்புறுத்த போவது கிடையாது. ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு ஒரு 10 வருடம் கழித்து அந்த இயக்குனர், தயாரிப்பாளர் அப்படி செய்தார் என்று கூறுவது என்னால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புடவை அணிந்து கொண்டு பேருந்தில் போகும் போது நான் கையை தூக்கினால் எனது இடை தெரியத்தான் செய்யும். அதேபோல் பேருந்தில் போகும்போது சில உடைகளை அணிந்து சென்றால் ஒரு ஆண் தொட்டால் அதை ஒரு பெண் அனுபவிக்கத்தான் வேண்டும் என்றார். அவரது இந்தப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Exit mobile version