பொழுதுபோக்கு

G.O.A.T கதை அம்பலமாகிடுச்சே.. இதுதான் ஸ்டோரியா? கெஸ் பண்ணிய ரசிகர்கள்

கோட் ஷாட்ஸ் வீடியோ மூலம் விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ஒட்டுமொத்த கதையே இப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் கெஸ் செய்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், மீனாக்‌ஷி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகும் என மீண்டும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கோட் படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது குறித்து சோஷியல் மீடியாவில் வலம் வரும் தகவல் என்ன தெரியுமா?
ஸ்குவாட் அதிகாரியாக இருக்கும் விஜய் தனது நண்பர்களான பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட டீமுடன் எதிரிகளை வேட்டையாடி வருகிறார். இன்னொரு பக்கம் மனைவி சினேகா மற்றும் மகன் விஜய் என சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
ஆனால், அப்போது நடக்கும் ஒரு பெரிய விபரீதம் காரணமாக அப்பா விஜய் தலைமறைவாகி விடுகிறார். அப்பா விஜய்யை எதிரியாக நினைத்து வளர்ந்து வரும் மகன் விஜய் அவரை கொல்லத் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இறுதியில் கூடவே இருந்த நண்பர்களில் ஒருவர் செய்த சதி தான் இது என தெரிய வர அப்பா விஜய்யுடன் இணைந்து கொண்டு கிளைமேக்ஸில் வில்லனை போட்டு பொளப்பது தான் கோட் படத்தின் கதையாக இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் கோட் ஷாட்ஸ் வீடியோவை பார்த்தே மொத்த கதையையும் உருவாக்கி சோஷியல் மீடியாவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இதே கதையில் பல படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நிலையில், வெங்கட் பிரபு நிச்சயம் ஏதாவது சயின்ஸ் ஃபிக்‌ஷன் மேஜிக்கை உள்ளே கொண்டு வந்து ஜெமினி மேன் போல விளையாடி இருந்தால் தான் நிச்சயம் படம் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் தளபதி ரசிகர்களுக்கு தரமான விருந்தாக அமையும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை என்கின்றனர்.
இன்னும் ஒரு சிலரோ அப்பாவை தவறாக சித்தரித்து அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், மகன் விஜய் டைம் ட்ராவல் செய்து உண்மையை கண்டுபிடித்து எதிரிகளை பந்தாடுவதுதான் கதை என மற்றுமொரு தரப்பினர்கூறி வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content