இலங்கை

உயர்தர பரீட்சை முடிவுகளும் கிழக்கு மாகாண மூதூர் வலயத்திற்கு கிடைத்த கெளரவமும்!

கிழக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் அடிப்படையில் மூதூர் வலயமானது முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள 2022ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணங்களில் உள்ள 17 கல்வி வலயங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் மூதூர் வலயமானது முதலாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூதூர் வலயத்தில் இருந்து 617 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 512 மாணவர்கள் சித்தியடைந்திருந்தார்கள் இது 83 வீதமான சித்தியாகும்.

78.8 வீதமான சித்தியினைப் பெற்று கிண்ணியா வலயமானது இரண்டாம் இடத்திலும், 77.7 வீதமான சித்தியினைப் பெற்று மட்டக்களப்பு மேற்கு வலயமானது 3ம் இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து மட்டக்களப்பு மத்தி, திருகோணமலை, மகாஓயா, பட்டிருப்பு, அக்கரைப்பற்று, மட்டக்களப்பு, திருக்கோவில், தெகியத்தகண்டிய, சம்மாந்துறை, கல்முனை, திருகோணமலை வடக்கு, கல்குடா, அம்பாறை மற்றும் கந்தளாய் ஆகிய வலயங்கள் 4ம் இடத்தில் இருந்து 17ம் இடங்கள்வரை தரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content