மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநரானவர் கௌதம் வாசுதேவ் மேனன். அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு என ஏகப்பட்ட படங்களை எடுத்து முன்னணி இயக்குநராக மாறினார்.
இந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
கௌதம், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘முத்தப்பிச்சை’ என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இதற்கான அர்த்தம் என்ன என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாகவுள்ளது. அதன் பாடலின் அப்டேட்டாக இருக்கலாம் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்