இலங்கை

வரலாற்றில் முதன்முறையாக இலங்கையர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நாடு

இலங்கையில் உள்ள திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளதாக மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கைக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இலங்கையின் முழு அரச நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் இணைந்து வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த முயற்சியின் கீழ், 58 தையல்காரர்களைக் கொண்ட முதல் குழுவினர் ஆகஸ்ட் 02, 2023 அன்று ரஷ்ய கூட்டமைப்பிற்கு சென்றது. அத்துடன், நிஸ்னி நோவ்கோரோட் பிராந்தியத்தில் அமைந்துள்ள இரண்டு புகழ்பெற்ற ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த 58 தையல்காரர்களை இடைநிலை நிறுவனங்களின் ஈடுபாடு இன்றி ஆட்சேர்ப்பு செய்வதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு தூதரகம் மேற்படி முதலாளிகளுக்கு வசதி செய்துள்ளது.

இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு மேலும் 700 வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள பிராந்திய அரசாங்க அதிகாரிகளுடன் முற்போக்கான முறையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

(Visited 16 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content