இலங்கை

கட்டுநாயக்கவில் தங்க பஸ்மங்களுடன் ஐவர் கைது!

சுங்கத்தின் மதிப்பீட்டின் பிரகாரம் 16 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் மற்றும் தங்க பஸ்மம் ஆகியவற்றை, இந்தியா, சென்னைக்கு கடத்திச் செல்வதற்கு முயன்ற வர்த்தகர்கள் ஐவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அண்மையில் தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான வர்த்தகர்கள் நால்வர் மற்றும் 55 வயதான வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சென்னை நோக்கி பகல் 1.55க்கு புறப்படவிருந்த விமானத்தில் பயணிப்பதற்கே அவர்கள் விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.

அவர்களின் பயணப்பொதிகளில் 8 கிலோ 650 கிராம் நிறையுடைய தங்க ஜெல் 23, தங்க பஸ்மம் அடங்கி 10 பக்கெற்றுகள் கைப்பற்றப்பட்டன.

(Visited 7 times, 1 visits today)
See also  இலங்கை: காணாமல் போன கணவன் மற்றும் குழந்தையை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content