இலங்கை

ராஜபக்சக்களை பழிவாங்கும் முயற்சியில் சனல் 4 – கடும் கோபத்தில் நாமல்

சனல் 4 ராஜபக்சவுடன் தொடர் வெறுப்பைக் கொண்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததில் இருந்து இந்த வெறுப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 வெளியிட்ட காணொளி நம்பகத்தன்மையானதாக இருந்தால் ஏன் அதனை தமது இணையத்தளத்திலிருந்து நீக்கியது என பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

சனல் 4 இன் சமீபத்திய காணொளி, பயங்கரவாதிகளை ஒழித்தற்காக ராஜபக்சக்களை பழிவாங்கும் மற்றொரு முயற்சியாக இருக்கலாம் அல்லது ஒருவரின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் இருக்கலாம்.

“2009 இல் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், சனல் 4 ஆனது எனது குடும்பம், எனது தந்தை மற்றும் ராஜபக்சவின் பெயர் மீது வரலாற்று வெறுப்பைக் கொண்டுள்ளது. அதன் பின்னர் ராஜபக்சவுக்கு எதிராக வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. “நான் சனல் 4 ஐ ஒரு ஊடக நிறுவனமாக பார்க்கவில்லை, மாறாக வீடியோ தயாரிப்பு நிறுவனமாக பார்க்கிறேன்” என்றும் நாமல் எம்.பி. தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் சனல் 4 வெளியிட்ட காணொளி இன்னமும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content