வாழ்வியல்

பச்சை குத்தியவர்கள் இரத்த தானம் செய்யலாமா?

சிவப்பு ரத்த உயிரணுக்களை 6 வாரங்களுக்கும் நுண்தட்டணுக்களை (platelets) 7 நாள்களுக்கும் மட்டுமே வைத்திருக்க முடியும்.

மருத்துவமனைகளில் தினமும் 400 பை ரத்தம் தேவைப்படும். ஆரோக்கியமானவர்கள் ரத்த தானம் செய்ய முன்வரலாம்.

தற்போது சிங்கப்பூர்வாசிகளில் 1.8 விழுக்காட்டினர் மட்டுமே ரத்த தானம் செய்கிறார்கள். ஆனால் இரத்த தானம் செய்வதில் சிலருக்குச் சந்தேகங்கள் இருக்கலாம்.

பச்சை குத்தியவர்கள் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரத்தம் கொடுக்க முடியாது என்ற தவறான கருத்தும் நிலவுகிறது.

யார்யார் ரத்த தானம் செய்யலாம்?

உடலில் துளை போட்டவர்கள் அல்லது பச்சை குத்தியவர்கள்

சுத்தமான, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஊசிகளால் பச்சை குத்தியிருந்தால் அல்லது உடலில் துளை போட்டிருந்தால் ரத்த தானம் செய்யலாம்.

ஆனால் சந்தேகமாக இருந்தால் பச்சை குத்திய அல்லது உடலில் துளை போட்ட 3 மாதங்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம்.

– புகைபிடிப்பவர்கள்
– அதிகக் கொழுப்பு உள்ளவர்கள்
– உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

ஆகியோரும் ரத்த தானம் செய்யலாம்.

உடல் கொழுப்பு அளவும் உயர் ரத்த அழுத்தமும் நிலையாக இருப்பதோடு வேறு எந்தச் சுகாதாரச் சிக்கல்களும் இல்லாத நிலையில் ரத்த தானம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என கூறப்படுகின்றது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content