ஐரோப்பா

நான்கு இஸ்ரேலியர்கள் மீது தடை விதித்த பிரித்தானியா!

மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது தடைகளை விதிப்பதாக பிரிட்டன் அரசாங்கம் இன்று (12.02) அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மேற்குக் கரையில் குடியேறியவர்கள், தங்கள் நிலத்தை விட்டு வெளியேறுமாறு பலஸ்தீனியர்களை துன்புறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னோடியில்லாத அளவு” வன்முறைகளுக்கு விடையிறுக்கும் வகையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டதாக பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் கூறியது.

Moshe Sharvit மற்றும் Yinon Levy ஆகியோர் “பாலஸ்தீனிய சமூகங்களை இடமாற்றம் செய்வதற்கான இலக்கு மற்றும் கணக்கிடப்பட்ட முயற்சியின்” ஒரு பகுதியாக சமீபத்திய மாதங்களில் பாலஸ்தீனிய குடும்பங்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர்களின் சொத்துக்களை அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் Zvi Bar Yosef மற்றும் Ely Federman ஆகிய இருவர் மீதும் தடை சொத்து தடை மற்றும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content