யாழில் ஜனாதிபதியை கட்டியணைத்த தாய் – இணையத்தில் வைரலாகும் புகைபடம்
பொதுத் தேர்தலின் பின்னர் வட பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு பெரு வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டார். இதன்போது தாய் ஒருவர் கட்டியணைத்த புகைப்படமொன்று தற்போது வைரலாக பரவி வருகின்றது. இந்த கூட்டததில் கலந்து கொண்ட ஜனாதிபதி, மறுமலர்ச்சிப் பயணத்திற்கு வலுசேர்க்க அணிதிரண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.