இலங்கையில் எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பு!
எலிக் காய்ச்சலின் தாக்கம், தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாகஇ இலங்கை மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை மருத்துவ சங்கத்தின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் சமூகநல வைத்திய அதிகாரி குஷானி தாபரே சிறுபோகம் இடம்பெறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியிலும் பெரும்போகம் இடம்பெறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் எலிக் காய்ச்சலின் தாக்கம் அதிகரிப்பதாகத் தெரிவித்தார். எனவே குறித்த காலப்பகுதியில் விவசாயிகளுக்கு, இது தொடர்பில் தெளிவுபடுத்திஇ நோய் எதிர்ப்பு […]