இலங்கை செய்தி

ஒத்திவைக்கப்பட்டுள்ள சாதாரணப் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களம்

  • April 12, 2023
  • 0 Comments

கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் எதிர்வரும் மே 14ம் திகதி 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது இந்தநிலையில் தற்போது குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சாதாரண தரப்பரீட்சைக்கான புதிய திகதி எதிர்வரும் மே 29ம் திகதி அறிவிக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

யாழில் சிங்களத்தில் மாற்றப்பட்ட வீதியின் பெயரால் பரபரப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளமையானது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயினாதீவில் அமைந்துள்ள வீதி ஒன்றின் பெயர் அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர மாவத்தை என சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கை துரித கதியில் இடம்பெற்றுவரும் இந்த நேரத்தில் இரவோடிரவாக இந்த பெயர்மாற்றமும் இடம்பெற்றுள்ளது. இது தற்போதைய அரசாங்கத்தின் சிங்கள மயமாக்கல் செயற்பாடு என பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு பொலிஸாரின் முக்கிய எச்சரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் பணப்பை திருடர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார்  அறிவுறுத்தியுள்ளனர். புத்தாண்டு காலத்தில் ஆடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும்போது அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தின்போது மக்களின் பாதுகாப்பு கருதி வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கு போக்குவரத்து உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை செய்தி

இலங்கையில் கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி

  • April 12, 2023
  • 0 Comments

பொலனறுவை – புலஸ்திகம பிரதேசத்தில் தனது கணவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி படுகொலை செய்ததாகக் கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று உயிரிழந்தவர் புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரென என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக நேற்றுக் காலை முதல் இருவருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது மனைவி கூரிய ஆயுதத்தினால் கணவரை தாக்கியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சண்டையின்போது காயமடைந்த மனைவியும், புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக […]

இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய மற்றுமொரு பெண்ணின் மரணம் – கணவனின் அதிர்ச்சி செயல்

  • April 12, 2023
  • 0 Comments

அரநாயக்க பிரதேசத்தில் குடும்ப தகராறு முற்றிய நிலையில் 23 வயதுடைய மனைவி கணவனால் தடியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் லம்புடுவ, மில்லங்கொட பகுதியை சேர்ந்த குமுதுனி தேஷானி ரணசிங்க என்ற ஒரு பிள்ளையின் தாயாவார். கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று பார்த்த போது, ​​யுவதி சமையல் அறையில் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். அரநாயக்க பொலிசார் நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்படவுள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் […]

இலங்கை செய்தி

இலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு!

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் தரமற்ற எடை மற்றும் அளவஉபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அதன் பணிப்பாளர் சுஜீவ அக்குரந்திலக்க தெரிவித்தார். இதன்படி, எடை மற்றும் அளவிடும் கருவிகளின் தரம் குறித்து 011 218 22 53 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என சுஜீவ அக்குரந்திலக்க குறிப்பிட்டார்.  

இலங்கை செய்தி

யாழில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவரின் அதிர்ச்சி செயல்

  • April 12, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – புண்ணாலைக் கட்டுவன் பகுதியல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 28 வயதான குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 157 கிராம் கஞ்சா கைப்பெற்றப்பட்டது. இவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நவக்கிரி பகுதியில் வைத்து ஒரு கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டிருந்தார். இருவரும் அச்சுவேலி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக […]

இலங்கை செய்தி

கொழும்பு நோக்கி வந்த ரயிலின் இயந்திரம் தனியாக பிரிந்துசென்ற காட்சி!! காணொளி

  • April 12, 2023
  • 0 Comments

காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த சமுத்திராதேவி ரயிலின் இயந்திரம் மற்றும் பெட்டிகள் பிரிந்து செல்லும் காட்சிகள் CCTV காணொளியாக வெளியாகியுள்ளது. சமுத்திராதேவி புகையிரதம் இன்று (09) காலை களுத்துறை வடக்கு புகையிரத நிலையத்தை கடந்து செல்லும் போது விபத்துக்குள்ளானதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார். பெட்டிகளில் இருந்து இன்ஜின் பிரிந்தவுடன்  சமுத்திராதேவியின் வண்டிகள் களுத்துறை வடக்கு – நாகை சந்தி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் இன்ஜின் வண்டிகளில் இருந்து பிரிந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் […]

இலங்கை செய்தி

ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது

  • April 12, 2023
  • 0 Comments

தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல குற்றப் பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஹரக் கட்டாவின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் மற்றுமொரு நபரையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பொலிஸ்காரர் மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவின் மிரிஹான உப பிரிவின் அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 74 கிராம் ‘ஐஸ் போதைப்பொருள் (Crystal methamphetamine), போதைப்பொருள் கடத்த […]

இலங்கை செய்தி

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண்!! வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் முறையான சிகிச்சை இன்றி உயிரிழந்த இலங்கை பெண் விஷ்மா சந்தமாலி தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த இளம் பெண் மார்ச் 6, 2021 அன்று ஜப்பானின் நகோயாவில் உள்ள தடுப்பு மையத்தில் இறந்தார். விசா காலாவதியாக ஜப்பானில் தங்கியிருந்ததாகக் கூறி விஷ்மா சந்தமாலி மார்ச் 6, 2021 அன்று மரணமடைந்தார். விஷ்மா […]

Skip to content